ஞாயிறு, மார்ச் 03, 2013

எக்கணத்தில்?



நமக்குள்...
அன்றைய பொருத்தங்கள்
... இன்றைய வருத்தங்களாய்
இடைவிடா நெருக்கங்கள்
...இணையிலா விரிசல்களாய்
கிடைத்திட்ட வசதிகள்
...தேவையிலா அசதிகளாய்
அர்த்தமில்லா இனிப்புகள்
...அர்த்தமிருந்தும் சலிப்புகளாய்
பரஸ்பரத் தொடுதல்கள்
...ஒட்டில்லா விடுதல்களாய்
பொழிந்த தேன்மாரியும்
...சிதறிய திராவகமாய்
அன்பான‌ ஆராவமுதும்
...வம்பான‌ பாராமுகமாய்
குறிஞ்சி முல்லையெலாம்
...இறுதியில் பாலையாய்
ஆனது எக்கணத்தில்?

2 கருத்துகள்: