செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

பாறை

புவியில் அடிப்படையில் மூன்று பாறை வகைகள் உள்ளன‌. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை என்பனவாகும். பையனின் பாடப்புத்தகத்தைப் படித்துச் சொல்லிக் கொடுக்கும் போது தோன்றிய கவிதை! படங்கள் விக்கிபீடியாவிலிருந்து!

தீப்பாறை:


மேல்வறுக்கும் ஆதவன் அரைவிடுப் பெடுப்பான்
மூச்சுமுட்டும் பாதாளன் முச்சூடும் அவிப்பான்
இருதலைக் கொள்ளியாய் எரிந்தெரிந் திறுகி
கல்லாய்ச் சமைந்து பிறந்திடும் பாறை!

உருமாறியபாறை:


இயற்கைச் சிற்பி வளியுளியால் செதுக்க‌
மழைநீராட்டி தூளெலாம் ஒற்றி ஒதுக்க‌
நுனிசிறுத்து அடிபெருத்து புவிக்கோ புரமாய்த்
திருவாகி உருமாறிக் கொண்டிடும் பாறை!

படிவப்பாறை:


மூடர் செல்வம்போல் அறிவோர் துயரம்போல்
செதுக்கிய தூளெலாம் வெள்ளத்தில் புரண்டு
அருவிபல கண்டு சமவெளியுந்தான் கண்டு
வண்டலாய்ப் படிந்தும் கருவாகும் பாறை!

முப்பாறை சொல்லும் கதையென்ன காண்;
இளக்கமும் இறுக்கமும் இங்கு பிறப்பிடமாம்
எதுவரினும் நிலையான உறுதியே இருத்தலாம்
கரைந்தாலும் பயனிட்டுப் புகழ் கொள்தலாம்.

4 கருத்துகள்:

  1. அருமை! பாறையை வைத்து மகனுக்குப் பாடம் நடத்திய அதே வேளையில் எங்களுக்கும் பாடஞ்சொன்ன விதம் அருமையிலும் அருமை! வாழ்த்துகள் ஔவை!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஆகஸ்ட் 24, 2013 7:29 AM

    வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பபூ அறிமுகம்மானது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/6_24.html?showComment=1377308895348#c7692767288255196790 வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு