சனி, ஜூன் 07, 2014

தா வரம்!

முத்து வள்ளிக் கிழங்கே
சற்றுங் காறாக் கத்திரியே
வழவழப்பு கண்ட‌தக் காளியே
விழுவிழுப்பு காணா வெண்டையே
உருக்க மணங்கூடு மாநெய்யே
பெருக்க‌ சுவைகுறையாப் பூசணியே
தோள்மட்டும் தொங்கும் புடலையே
நாட்பட்டும் மங்காச் செந்தேனே
அரிந்தெடுத்த இருகாற் பசுங்கீரையே
தெரிந்தெடுத்த முற்றா முருங்கையே
கரைதனிலே கடல்கண்ட உப்பளமே
சிவந்துந் சிவக்கா அப்பளமே
எங்கெங்கு அலைந்தே தேடினும்
அங்கெலாங் கிடையாத் தாவரமே
அங்கமதில் பங்கதுவாய் எப்பிறப்பும்
இங்கிதமாய் வந்திடவே தாவரமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக