வியாழன், ஆகஸ்ட் 25, 2011

தனியாய் அலைந்தேனே மேகமாய்





I Wandered Lonely As A Cloud by William Wordsworth

I wandered lonely as a cloud
That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.

Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.

The waves beside them danced, but they
Out-did the sparkling leaves in glee;
A poet could not be but gay,
In such a jocund company!
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought:

For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் "தனியாய் அலைந்தேனே மேகமாய்"

மடுவாலும் முகடாலுந் தொடமுடியாத் தூரமாய்
முகவரியிலா வானமதில் முகவரியிலா மேகமாய்க்
காலிழுத்த திக்கிலே அலைந்தேனே சோகமாய்
சட்டென்று மாறிடுங் காட்சியொன்று கண்டேன்
முட்டிநீர்த் ததும்பும் செங்குளக் கரைதனில்
இச்சைகொள் பச்சை தெறித்திடும் மரத்தடியில்
விசும்பு விரும்பத் தலையாட்டி நடனமிடும்
பட்டாய்த் தகதகக்கும் பொன்னரளி மலர்களை!

ஒளிவெள்ளம் பொங்கிடும் பால்வெளி வீதிதனில்
துள்ளி மினுக்கிடும் விண்மீன்கள் போலவே
எங்கெங்கு காணினும் உருக்கிய கனகமாய்த்
தரையெங்கும் கடலென விரிந்து கிடந்தன.

நித்தமுங் குதித்துக் குதூகலமாய்த் தலையாட்டிப்
பித்தந்தரு மொருநொடியிற் சுகந்தமாய்ச் சுத்தமாய்ப்
பத்தாயிரம் மலர்மட்டு மகலக் கண்விரித்து
மொத்தமுஞ் சிரந்தூக்கிச் சிரித்தன யெனைக்கண்டு!

அலைத்தாளந் தப்பாத நடனத்தில் சதிராடும்
இலைகளை வென்றிட்ட களிப்பிலே ஆடின
குவித்து ஓரிடமாய் ஆனந்தஞ் சேர்கையிலே
பாவம் கவிஞன் தானென் செய்வான்?
பார்த்தேன்! பார்த்தேன்! கண்களால் விழுங்கினேன்!
ஈர்த்தயிவ் வேளையிலு மென்மனமோ யிக்காட்சி
சேர்த்திட்ட செல்வந்தா னென்னதென்று வினவியது!

அற்றுப் பலகாலும் வெற்றிருளில் தனியராய்ப்
பற்றேது மில்லாது பரிதவித்துக் கிடக்கையிலே
முற்றிய தவத்தின் பலனாய் அருள்கொண்டு
பெற்றிட்ட வரமா யுட்கண்ணிற் காட்சியது
உற்றதொரு ஞானச் சோதியெனப் பரவுகையில்
என்னிதயத் தாமரையப் பொன்னரளிச் சோலையில்
மலரோடு மலராக நிறைந்தாடக் கண்டேனே!


2 கருத்துகள்:

  1. மிக மிக அருமை
    மொழி மாற்றம் என உறுதியாய் சொல்ல இயலாது
    தங்கள் பதிவினைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு