செவ்வாய், செப்டம்பர் 17, 2013

ஏன்?

ஒழுகுங் குடையாய் வெளுக்கா வானம்
நகர்ந்தால் துளைத்திடும் முள்ளறைச் சுவர்கள்
விடையிலாக் கேள்விகள் விடைபெற்ற அன்பு
விடமுடியா வெறுப்பு தொடுவான ஏக்கம்
ஏலமிடும் சொந்தம் ஓலமிடும் மனம்
அணைகட்டும் இமை கால்வாய்க் கன்னம்
வற்றாச் சோகக் கடல்சேர் ஆசை
முற்றாப் புள்ளி ஊமைக் காதை
நரகல் யாக்கை நரகில் வாழ்க்கை
வாய்க்கா இறப்பு ஏனிந்தப் படைப்பு?

1 கருத்து: