வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

பொய்யென...

அரசியல் அடிதடிக்கும்
ஆர்ப்பாட்டக் கயமைக்கும்
ஆன்மீகக் கபடத்துக்கும்
சோரமான உழைப்புக்கும்
தாந்தோன்றிச் சிறுமைக்கும்
தான்னோக்கும் கொடுமைக்கும்
வியாபாரக் கல்விக்கும்
நடுநில்லா நீதிக்கும்
வீரநாண‌மில்லா ஆண்மைக்கும்
நாணவீர‌மில்லாப் பெண்மைக்கும்
பரிசாயின்று வானமும்
பொய்யெனப் பொய்த்ததோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக