வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

இஃதென்ன?



இஃதென்ன?
புன்னகைச் சுரங்கம் அரங்கம் ஏறுதோ?
குதூகலக் கப்பல் பவனி துவங்குதோ?
இன்பக் கருவூலக் கதவு திறக்குதோ?
மகிழ்ச்சி மடைதிறந்து கடலாய் நிறையுதோ?
வல்லினக் கரத்தில் மெல்லினம் இழையுதோ?
தோஷமில்லாச் சந்தோஷம் எங்கும் பரவுதோ?
கடைகாணா நகைகள் கடைவாயில் கிடைக்குதோ?
ஏழ்மைச் செல்வம் குபேரனை வெல்லுதோ?
உள்ளத்தின் பல்லக்கில் வெண்மை விளங்குதோ?
உள்ளதில் வாழ்வதால் இன்மை குறையுதோ?
இன்றில் வாழ்வதால் நாளை மறந்ததோ?
பயணம் துவங்கிட வழியும் தெரியுதோ?

1 கருத்து:

  1. புகைப்படத்தில் இருக்கும் மழலைகள் அள்ளிப்பருகிடும் இன்பத்தினைப் போல எல்லோராலும் எல்லா சமயத்திலேயும் பருகிட இயலாது என்பது தான் உண்மை.!

    கேள்விக்கணைகளில் புகுந்திருக்கும் பதில்கள் அற்புதம்.

    நன்றி

    பதிலளிநீக்கு