ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

முகமூடிகள்



சுயத்தை மறைக்க‌
ஆதாம் ஏவாளின்
அரையில் இருந்து
சிரம் வந்து சேர்ந்த
நவீனப் பயணிகள்

உள்ளே புழுக்கள் நெளிதலையும்
வெளியே பழுத்த தோலாய்
உள்ளே நமுட்டுச் சிரிப்பையும்
வெளியே அன்பு நீவுதலாய்
மாற்றிக் காட்டும் சௌகரியங்கள்

ஆட்டி வைப்பவன் ஒருவன்
ஆடித் தீர்ப்பவன் கருவி
பாரீரே பாரீர் என்றே
பகுத்தறிந்து பார்க்கச் சொல்லும்
நிதர்சன நாத்திக ஆத்திகங்கள்.

அண்ணனுக்குத் தம்பியாய்
மகனுக்கு அப்பனாய்
தோழனுக்குக் தோழனாய்
பகைவனுக்குப் பகைவனாய்
நடித்துத் தான் பாரென்றே
சொன்ன கண்ணனின்
கீதைக் கருவிகள்.

ஒருமித்த காதலின்றியே
காதல் கொண்டதாய்
நடிக்கையில் மட்டும்
கொஞ்சமும் பொருந்தாமல்
உறுத்தும் நெருடல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக