ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

அலைகள் நிற்கட்டும்



என்னுலகம் சகலமும் ஒருநிமிடம் நிறுத்தினேன்.
முன்புறக் கண்களைக் கதவடைத்துப் பூட்டிக்கொஞ்சம்
காதுகளைக் கண்களாக்கி அகந்திறந்து பார்த்தேன்.
ஒலிகளே ஒளிகளாய் புலனெங்கும் ஓடக்கண்டேன்.
எம்மொழியாலும் சொல்லவியலா ஒலியெழுத்தில்
நாள்முழுதும் ஓயாது ஜெபித்தது கடிகாரம்.
எங்கோ தூரத்தின் ஓரத்தில் இடவலமாய்
இரைச்சலுடன் வாகனத்தின் தரைதேய்ப்பு
பாய்ந்து தோய்ந்து தேய்ந்து மாய்ந்தது.
கணினியும் அதன்காற்றாடியும் எனக்கே எனக்காய்
மாடாய் உழைக்கின்ற சப்தமும் நிறைந்தது.
மௌனத்தின் விளிம்பு வரை சென்றாலும்
பெருங்கடலைத் தீண்டவோ தாண்டவோ
திராணியற்று நின்றுவிட்டேன்.
அலைகள் நிற்கட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக