ஞாயிறு, ஜனவரி 22, 2012

கும்கி - 2


கடவுள் வணக்கம்:

ஏக நாயகன் ஞான வித்தகன்
ஞால முதலவன் கோடி ஒளியவன்
மூல முறைபவன் நாத முறையவன்
கால நெறியவன் ஓது மறையவன்

ஆனை முகத்தவன் பானை வயிற்றவன்
ஓமெனும் பிரணவன் சேமந் தருபவன்
காட்சிக்கு எளியவன் மாட்சிக்குப் பெரியவன்
பாதக் கமலம் பணிந்து போற்றியென‌

வாயால் பாடி மனத்தால் ஆடி
கண்கள் கலங்கி உயிரது உருகி
பக்திக் கட்டில் தன்னை விடுத்து
அன்னை பாரதி அன்பாய்த் தொழுதனள்

செல்வன் அமைதியாய்த் தாயொடு நின்றான்
செல்வி செல்லமாய்த் தந்தையொடு இயைந்தாள்
மலரன்ன‌ கண்களை மெதுவாய்த் திறந்தாள்
தந்தையின் கரங்களைப் பற்றி இழுத்தாள்.

என்ன குறும்பிது பூசை நேரத்தில்
என்றே தவமணி பொறுமை காத்தார்
'சின்ன எலியேறிப் பிள்ளையார் சொகுசாய்ப்
போவதும் எப்படியோ என்றே கேட்டாள்!'

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக