ஞாயிறு, ஜனவரி 22, 2012

கும்கி - 3

அத்தோடு விட்டாளா?

'மூஞ்சூறு கரத்திருக்கும் கொழுக்கட்டை
அதுவாய் விழுந்ததா?
பிள்ளையார் கொடுத்தாரா?'

என்று அடுத்துத் தொடுத்தாள் கேள்விக்கணை!

மழலைக் கேள்விக்கு மலங்க விழித்தார்
வ‌லமிடந் தலையாட்டி விளையாடச் செல்லென்றார்
வந்தான் செல்வன் துடுக்காய் உதவிக்கு
தந்தான் செல்விக்குப் பதிலுக்குப் பதிலாய்

'அடிச்செல்வி!
கனத்த சரீரம் அவருக்கடி!
நடக்கவே மருத்துவர் சொன்னாரடி!
நடைபயண உதவிக்கே மூஞ்சூறடி!
அதனாலே அழகனுடன் போட்டிக்கு
எலிமேல் ஏறாமல் அழகாய்
தாய்தந்தை வலம்வந்த உத்தமனடி!

தானே உருவாக்கி தரணிக்கே தருபவன்
தேனான கொழுக்கட்டை தந்திட‌ மாட்டானோ?
மழலைகள் தெய்வமடி கலைகளின் ராஜனடி!
தலையிலே குட்டிக் கரணமும் போடடி!

நீ குட்டுவாயா நானே குட்டவா?'
அண்ணன் செல்லமாய் விரட்டத்
தப்பியோடி இக்காட்சி ரசித்திட்ட‌
தாயிடம் புகுந்தாள் தஞ்சம்

(தொடரும்)

1 கருத்து: