திங்கள், பிப்ரவரி 20, 2012

கும்கி - 4

ஊர்வலக் காட்சி:

ப‌ள்ளி யெழுச்சி காலை எட்டு
பள்ளி சென்று மீள்தல் நான்கு
பாடச் சுமை இறக்கம் எட்டு
பள்ளி சோர்வது இரவு பத்து

முற்காலத்திற் பொழுதுண்டு போக்கில்லை
தற்காலத்திற் போக்குண்டு பொழுதில்லை
பொற்காலம் ஈதென்றே கருதுவார்
கற்காலம் நோக்கிப் போவதறியார்

நொடியேனும் அசராது ஓரிடத்தில் நில்லாது
கடிகாரம் விரட்டியே போவும் காலமும் 
விடுமுறைக் காலமோ முறைவிடுதல் இல்லாது
தொலைக்காட்சிப் பெட்டியே கதியென் றாகிடும்.

இன்று பள்ளிக்கு விடுமுறை யாதலால்
கன்றுகள் துள்ளிப் படங்காணத் துடித்தனர்
என்றும் போலவே மின்சாரம் போனது
என்றும் இல்லாமல் திரும்ப வராமல்!

ஓடி விளையாடப் பெற்றோர் விடுவதில்லை
ஆடி விளையாடப் பிள்ளைகள் விரும்பவில்லை
வேறு வழியின்றி உலகையே சலித்து
வேறு எங்கேனும் செல்ல நினைத்தனர்

நவமணியும் விளையும் நலமிகு நிலபுலனாய்த்
தவமணியின் தந்தை சேர்த்திட்ட சொத்து
தூரத்துக் கிராமத்தில் தனியாய்க் கிடந்தது
நேரத்தைக் கழித்திடக் கிளம்பினர் அங்கு.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக