புதன், டிசம்பர் 07, 2011

டிசம்பர் 6




ராமரும் பாபரும் எப்போதோ ஓரிடத்தில்
பக்தரும் சோதரரும் இப்போதும் போரிடத்தில்

வந்துவிட்டது மீண்டும் ஒரு டிசம்பர் 6
மறந்து விட்ட மாந்தருக்கும் வெறியேற்றும் விதமாகத்
தரைப்படையும், ஊர்ப்படையும், வான்படையும்
நாவாயும் ஆக நாற்படையும் அமளிபட்டது!

நீட்டிப் போட்டால் திருநீறு
நிமிர்த்திப் போட்டால் திருநாமம்
குறுக்கே போட்டால் நற்சிலுவை
வளைத்துப் போட்டால் பிறையன்றோ?

மொழிமத சாதியின நிறவர்க்கக் கோடுகள்
நம்மைப் பிரிக்க நாமென்ன நிலமா?
விட்டுக் கொடுப்பதில் ஏனில்லை
இந்தப் போட்டியும் பொறாமையும்?

இந்து இந்துவாயின் அகிம்சை விடுவாரோ?
பிறையோர் பிறையோராயின் ஆயுதம் தொடுவாரோ?
வெறிகொள் பிழையோரை யாரென்று கண்டறிவோம்
பாரதத் தாய்பெற்ற களங்கத்தைத் துடைத்தெறிவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக