புதன், ஜூன் 08, 2011

நாய்கள்

எங்களுக்குள் எல்லையுண்டு போர்முழக்கம் இருந்ததுண்டு
காதலுண்டு மோதலுண்டு நொடியில்மறந்து போவதுண்டு.
புள்ளகுட்டி பொறந்ததுண்டு வாரிசெனும் குழப்பமில்லை
சாதியுண்டு சங்கமுண்டு அடிதடிஎன்று மிருந்ததில்லை

நன்றியென்ற உணர்வுமுண்டு நட்புயெனும் பாசமுண்டு
ஏழைபாழை பிரிவுமுண்டு சமத்துவமும் குறைந்ததில்லை
கருப்புவெள்ளை நிறமுமுண்டு பேதமென்றும் இருந்ததில்லை
யாவுமிருந்தும் மானிடரே! ஏதுமில்லா தேனிருக்கின்றீர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக