புதன், ஜூன் 08, 2011

முரண் பாடு!

'அமைதியாய் இருங்கள்' 
சத்தமாய்ச் சொன்னார் நூலகர்!

'மெதுவாய்ச் செல்லுங்கள்'
வேகமாய்ச் சொன்னார் காவலர்!

'ஒருமுகப் படுத்துங்கள்'
அலைந்தபடி சொன்னார் ஆன்மிகர்!

'ஊழலைத் தடுப்போம்'
கைநீட்டிச் சொன்னார் தலைவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக