புதன், ஜூன் 08, 2011

நிலாமகள் வருகை

இன்று புவியின் மிக அருகில் வந்த நிலவின் வருகை நிகழ்வையொட்டி நான்கு வரிகளில் நன்மையும், நான்கு வரிகளில் தீமையும்:

புவியின் அடங்காத் தகிப்பைத் தணிக்கச்
...சற்றே யருகினில் வந்தாயோ தண்ணிலவே?

கவியும் மேகத்திரை விலக்கிக் கவியும்
...வற்றாக் கவிபுனைய வந்தாயோ பெண்ணிலவே?

தவிக்கும் காதலர்தம் தகுந்த தூதாய்
...உற்றதோர் துணையாய் வந்தாயோ வெண்ணிலவே?

குவிக்கும் கதிரொளி காட்டியே சோறூட்ட
...மற்றதோர் தாயாய் வந்தாயோ கண்ணிலவே?


உறக்க மறுத்திங்கு இளையோர் இயற்கை
...விலக்கச் சீற்றம் கொண்டனையோ புண்ணிலவே?

இறக்கப் பிறந்தவர் வாழ்வதேனென இரக்கமின்றி
...உலுக்கிப் புரட்டவே வந்தனையோ வன்னிலவே?

துறக்க ஏதுமிலாப் பதராய் மானுடம்
...கலங்கித் தவித்திடநீ சிரிப்பாயோ துர்நிலவே?

மறக்க முடியாக் கவலையாற் புவிமகள்
...குலுங்கி யழுதிடக் கருதாயோ செந்நிலவே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக